Friday, April 24, 2015

’ஹீரோயின் செவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்ல’

நட்சத்திர வேட்டை
’ரூபச்சித்திர மாமரக்கிளியே’
‘மூவி ஃபண்டிங் நெட்வொர்க்’
கதாநாயகி வயது 21-25. சிவப்பா பயங்கரமா இருக்கனும்னு அவசியமில்லை.

அவரது இரு தோழிகள். அதே வயசு. ரேடியோ ஜாக்கிங்க மாதிரி வளவளன்னு பேசனும்.
ஒரு அம்மா கேரக்டர். கொஞ்சம் ஸ்போர்டிவான மம்மியா வேணும்.
ஒரு அக்கா. தம்பி எப்ப கேட்டாலும் முகம் சுழிக்காம நகையை கழட்டிக்கொடுக்கிற அக்கா.
செகண்ட் ஹீரோ 22-30 வயசுக்குள்ள. நகரத்து வெவரமான பையன்.
தன்னை இன்னும் யூத்துன்னு நம்பிக்கிட்டிருக்க ஒரு நாப்பது வயசு அங்கிள்.
ஒரு வில்லன் ரோல். போலீஸா இருந்து டிஸ்மிஸ் ஆகி பொறுக்கியா ஆனவரு.
இன்னொரு 20 வயசு இளம் ஹீரோ. பெங்களூர் பையன். கன்னடம் தெரிஞ்சிருந்தா நல்லது.
‘பழைய பன்னீர்ச்செல்வமா நீ வரனும்’ங்குற கெத்து காட்டுற 50 வயசு தெனாவெட்டு மனிதர்.
ஸ்டில் ஷூட், படப்பிடிப்பு தேதிகள் ஒரு சில தினங்களில் அறிவிக்கப்படும்...
Casting call for Tamil Feature Film
Title: Rooba Chithira Mamara Kizhiye
Production Banner: Movie Funding Network
Director: Muthuramalingan
Role#1: "Heroine", Female, Age around 21-25, to play an village based college girl who is very ambitious.

role 2and 3#and two friends charactor aged between 22- 25.
role4# one mother role expected around 35 -45.

role 5# and one sister role aged between 30-35.

Role#6: "2nd Hero". Male, Age 22-30, Fair, good looking guy needed for a "city raised" romantic hero role.

Role#7: Character role, Male, Age 40+, An middle aged, unmarried, man still living in his youth days, mingling with boys of 20s age group.

Role#8: "Cop Turned Pimp" Role, Male, Age 30-40, physically strong build, with some heavy hyderabadhi accent. Fluency in Telugu & Tamil is a plus.

Role#9: Character Role, Male, teenage looking boy, Age below 20, to play the dirty street smart kid. Banagalore based tamil boy is preferred. Should be able to speak kannada along with tamil.

Role#10: Character Role, Male, Above 50, we are looking someone who looks like and can perform like the legendary actor thilagan.

for contact;

movie.funding.network@gmail.com

muthuramalingam30@gmail.com

ohoproductionss@gmail.com

Friday, April 10, 2015

’பழைய்ய போட்டோ அனுப்புனீங்க பிச்சுப்புடுவேன் பிச்சி...’



’ஒரு பதிவு எழுதுகிறாயா அல்லது நூறு தோப்புக்கரணம் போடுகிறாயா?’ என்று கேட்டால் ‘இருநூறு தோப்புக்கரணம் கூட போடுகிறேன். ஆளைவிடுங்க சாமி’ என்று சொல்கிற அளவுக்கு, எழுதுவதென்பது அவ்வளவு சோம்பலாய் இருக்கிறது.

தினமும் சகட்டுமேனிக்கு எழுதிக்குவிக்கிற நபர்களைப்பார்த்தால் கெட்ட கோபம் வருகிறது. ’எழுதுவியா எழுதுவியா தெனமும் எழுதுவியா?’ என்று அவர்களது நடுமண்டையில் நங்கு நங்கென்று நாலு குட்டு வைக்க கை துடியாய் துடிக்கிறது. வா.மணிகண்டன், அ.ராமசாமி போன்ற நண்பர்களும் அந்தப்பட்டியலில் இருப்பதால் அப்படிப்பட்ட செயலில் இப்போதைக்கு இறங்கமுடியாது.


சரி அதைப்பிறகு யோசிப்போம். ஒரு சிறிய ஸ்டார்ட்டிங் ட்ரபிளைக் கடந்து எனது அடுத்த படவேலைகளை இன்று முதல் தொடங்கிவிட்டேன் நண்பர்களே. கதை மற்ற விபரங்கள் குறித்து அடுத்தடுத்து அறிவிக்கிறேன்.

முதல் படம் போலவே இந்தப்படமும் ஏழ்மையான பட்ஜெட் என்றாலும் முதல் படத்தில் கற்றுக்கொண்ட பாடத்தால் அதை விட பலமடங்கு சிறப்பாக இப்படத்தை இயக்கிவிட முடியும் என்ற நம்பிக்கை.

இப்படம் தொடர்பாக நான் இனி தொடர்ந்து எழுதுவேன்.

இதில் என்னுடன் உதவி இயக்குநராக, தொழில் நுட்பக்கலைஞராக, நடிகர்களாக தோள் கொடுக்க விரும்புபவர்கள் எனது மெயில் ஐடிகளில் தொடர்பு கொள்ளுங்கள்.

புகைப்படங்களுடன் [பத்து வருஷத்துக்கு முந்தி எடுத்ததெல்லாம் அனுப்பினா இ.பி.கோ.செக்‌ஷன் 418-ன் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.ஆனா இது எனக்குப் பொருந்தாது.] கூடுமானவரை உங்களைப்பற்றிய அதிக விபரங்களை அளித்து விண்ணப்பிக்கவும். நான் எனது அலைபேசி எண்ணை உங்களுக்குத் தரும்வரை போனில் தொடர்புகொள்ள முயலவேண்டாம்.

நாளை இன்னும் கொஞ்சம் விரிவாக எழுதுகிறேன்

எனது மெயில் ஐடிகள்
muthuramalingam30@gmail.com
ohoproductionss@gmail.com
movie.funding.network@gmail.com



Monday, February 9, 2015

’ஸ்டார்ட் கட் கத்தரிக்காய்... ஸ்டார்ட் கட் வெண்டைக்காய்’


‘இனி யாரை வேண்டுமானாலும் விசாரிக்கலாம்
என்ன செய்கிறாய் என்று...
எனக்கொரு வேலை கிடைத்துவிட்டது’ 

இந்த அர்த்தம் தொனிக்க நீண்ட காலத்துக்கு முன்பு வண்ணதாசன்[?] ஒரு கவிதை எழுதியிருப்பார்.

இப்படிப்பட்ட கேள்விகளை, விசாரிப்புகளை நண்பர்களிடமிருந்து, நலம் விரும்பிகளிடமிருந்து, தெரிந்தவர்களிடமிருந்து, அன்றுதான் அறிந்தவர்களிடமிருந்து என்று பலமுனைகளில் வாழ்நாள் முழுக்க எதிர்கொண்டே ஆகவேண்டும்.கோப்பைகளுக்கு அடுத்தபடியாக  கேள்விகளால் நிரம்பியது வாழ்க்கை.’ஏன் என்று கேட்காமல் வாழ்க்கை இல்லை?’ நான்’ என்ற எண்ணம் கொண்ட நம்பியார்கள் வாழ்ந்ததில்லை.

கடந்த ஒரு மாதமாய் அமைதியாய் இருந்தது தவிர்த்து, எனது இரண்டாவது பட நிலவரம் குறித்து தொடர்ந்து முகநூலிலும், இந்த ஓஹோவிலும் எழுதிவந்தாலும் போனிலும் நேரிலுமாய் நண்பர்களிடமிருந்து
நூற்றுக்கணக்கில் கேள்விகள் வருகின்றன. அதிக பட்சமாய் கேட்கப்படும் கேள்வி ‘எப்ப ஷூட்டிங். எனக்கு நடிக்க சான்ஸ் இருக்கா?தான். ‘இருக்கும்...இல்லாம எப்படி இருக்கும்?’- அப்போதைக்கு எனது பதில் இதுதான்.

படவேலைகள் எப்படி நடக்கவேண்டுமோ அப்படி நடந்து வருகின்றன. இனிமேல் கேள்விகளுக்கு இடமளிக்காத வண்ணம் என்ன நடக்கிறதென்று தொடர்ந்து எழுதியே தீருவேன். ஏனெனில் வேறு வழியின்றி, சில தினங்களுக்கு முன்பு, என்னையும் எழுத்தாளர்கள் பட்டியலில் நானே சேர்த்துக்கொண்டேன்.
[சினிமாக்காரன் சாலை... - 'நல்லா பாத்துக்கங்க, நானும் இப்போ ரவுடிதான்!'

Read more at: http://tamil.filmibeat.com/cinemaakkaran-saalai/cinemakkaran-salai-new-series-on-tamil-cinema-032839.html ]

மார்ச் 1 முதல் 24 மணிநேர சினிமா வேலைதான். உதவி இயக்குநர்கள், நடிக்கவிரும்புபவர்கள், மற்ற பங்களிப்பாளர்கள் யார் தொடர்புகொண்டாலும் உடனே ரெஸ்பாண்ட் பண்ணுவேன்.

முதலில் அந்த ஒரு மாத அமைதிக்கு விளக்கம் சொல்லிவிடுகிறேன்.

நமது’மூவிஃபண்டிங்’  அலுவலகத்தில் புழங்கும் நண்பர்களின் எண்ணிக்கை அதிகமானதைத் தொடர்ந்து உணவுச்செலவு அதிகமானது. எங்களது இரண்டும் சிக்கன பட்ஜெட் படங்களாச்சே? அதுகுறித்து நானும் ஜெய்லானி சாரும் பேசிக்கொண்டிருந்தபோது, வெளியே சாப்பாடு எடுப்பதற்குப் பதில் நாமே ஒரு மெஸ் துவங்கினால் என்ன என்ற யோசனையை ஜெய்லானி சார் முன்வைக்க, சிலபல ஆலோசனைகளுக்குப்பிறகு ‘வீட்டுச்சாப்பாடுhttp://veettusappadu.com/  என்ற ஒரு ’கண்ணுக்குத்தெரியாத’ மெஸ் ஒன்றை

ஆரம்பித்தோம். அதற்கு முதல் கஸ்டமர்கள் நாங்கள்தான்.முதல் வெற்றியாக எங்கள் அலுவலக உணவுச்செலவு பாதியானது. அடுத்த வெற்றி முகநூல் நண்பர்கள் ஆதரவுடன், வேலைக்கு ஆட்கள் எடுப்பதற்கு முன்பே,  அது மெல்ல சூடு பிடிக்க ஆரம்பிக்க, சிக்கன திட்டத்தின் பலிகடாவாக, கொஞ்சமும் ஈவு இரக்கமில்லாமல், கடந்த ஒரு மாதமும் என்னையே காய்கறிகள் வெட்டவைத்தார்கள்.


‘ஸ்டார்ட் கட்’ சொல்லவேண்டிய இந்தக்கைகள் கடந்த முப்பது நாளும்
‘ஸ்டார் கட் கத்தரிக்காய், ‘ஸ்டார்ட் கட் வெண்டைக்காய், ஸ்டாப் அடுத்து அவசரமா கட் வெங்காயம்’... என்று பெரும் அநீதியாக நடந்தது.

 ’எழுத்தாளர் வெங்காயம் நல்லாத்தான் வெட்றாரு’ என்று சமையல் அம்மணிகள் நக்கல் விட்டார்கள். விரல்கள் பத்தும் கதறி அழுதன. ’ஏலி ஏலி லாமா சபக்தானி’ என்று ஏசுவை அழைத்தேன். யாருக்கும் கேட்டுவிடாதபடி ‘தென்பாண்டிச்சீமையிலே’ வை மனசுக்குள் சன்னமாய்ப் பாடித்தேற்றிக்கொண்டேன்.  தினமும் குறைந்தது 20 கிலோ காய்கள். அதில் 5கிலோ வெங்காயம் வெட்டி, ஒரு ஏழை எழுத்தாளனாகிய நான் விட்ட கண்ணீருக்கு ஜெய்லானி சாரும் இந்த உலகமும் பதில் சொல்லியே ஆகவேண்டும்.

இப்போது ‘வீட்டுச்சாப்பாடு’ நன்கு சூடு பிடித்துவிட்ட நிலையில், காய் வெட்டும் வேலையிலிருந்து அனைத்து வேலைகளுக்கும் ஊழியர்கள் நியமித்து விட்டு, ‘வீட்டுச்சாப்பாடு’ தன் சொந்தக்காலில் நிற்க ஆரம்பிக்க, பட வேலைகளைத் துவங்கிவிட்டோம்.

என்றாவது ஒருநாள், என் சொந்தக்கதையை சினிமாவாக எடுக்கும்போது, இந்த அனுபவம் நல்ல காட்சிகளாக மாறி, அது சமூகத்துக்கு குறியீடுகளுடன் சில செய்திகளைச் சொல்லும் என்று இப்போதைக்கு ஆறுதல் அடைந்துகொண்டேன்.வேற வழி?

ஒருவழியாக பீர்க்கங்காய் கட்டிங்கிலிருந்து ஃபிலிம் கட்டிங்குக்கு ஷிஃப்ட் ஆயாச்சி. ALL IS WELL.

Wednesday, January 21, 2015

ப்ளீஸ் நோட் திஸ் மிஸ்டர் செல்லமுத்து குப்புசாமி

யாரை, என்னத்தை, எப்போ,எங்கே எப்படி, எதுக்கு எரிப்பார்கள் என்று தெரிந்துகொள்ளமுடியாத, வானத்துக்கு கீழே உள்ள அத்தனை கெட்ட கிரகங்களும் கூடியிருந்து கொட்டமடிக்கும் இடம் என்பதால் பெரும்பாலும் நான் புத்தக கண்காட்சிகள் பக்கம் போவதே இல்லை.

இன்னொரு காரணம் இல்லக்கியவாதிகள் கூடியிருக்கும் இடத்தில் நமக்கு கண்டிப்பாக வேலையில்லை. கல்லூரி நாட்களிலேயே தகுதிக்கு மீறி தாடிவளர்த்து, ஜோல்னா பையில் ஆத்மா நாம், ஆதவன், லா.ச.ரா, அசோகமித்திரன்,ஜி.நாகராஜன் மற்றும் ‘அன்னம் விடு தூதுகளுடன் டயர்டாகுற அளவுக்கு அலைஞ்சாச்சி.

இப்படி போவதில்லை என்று எழுத ஆரம்பிப்பதே போனதைப் பற்றி என்னத்தையோ எழுதத்தான் என்பது என்னத்தே கன்னையா உட்பட எல்லோருக்கும் தெரியும்.
இனியும் கொண்டுகொலையெடுக்காமல் மேட்டருக்கு வருகிறேன்...

கடந்த சனியன்று மாலை சுமார் ஏழு மணியளவில் புத்தகக்கண்காட்சிக்கு போயிருந்தேன்.

ஒரே நோக்கம் முகநூல் மூலம் பரிச்சயமான எழுத்தாளர் வா.மணிகண்டனை சந்திப்பது. அவரை முகநூலில் பார்க்கும்போதெல்லாம் ‘முந்தானை முடிச்சு’ பாக்கியராஜ் ஏன் என் நினைவுக்கு வருகிறார் என்று சொல்லத்தெரியவில்லை. ஒருவேளை இதற்கு தக்க பதில் மணிகண்டனிடம் இருக்கலாம்.

அவருடைய முகநூல் ஸ்டேட்டஸ்களையும், ‘நிசப்தம்’ ப்ளாக்கையும் ரெகுலராக வாசிப்பதுண்டு. அவரது அறக்கட்டளை குறித்தும் ஓரளவு அறிந்ததுண்டு.

நேரில் சந்தித்தது அதுதான் முதல்முறை. அவர் சொன்ன ஸ்டால் நம்பரை நோக்கி நடந்தபோது முதலில் என் பார்வையில் பட்டவர் இலக்கிய உலகின் வெடிகுண்டு முருகேஷன் என்று அழைக்கப்படும் வேடியப்பன். அவருக்குப் பக்கத்தில் வேஷ்டி சகிதமாக வெண் புன்னகையுடன் வரவேற்றார் மணிகண்டன்.

பரஸ்பர நலம் விசாரிப்புகளுக்குப்பின் அவரது சிறுகதைத்தொகுப்பான ‘லிண்ட்சே லோஹன் W/O மாரியப்பன்’ மற்றும் கட்டுரைத்தொகுப்பான ‘மசால்தோசை 38 ரூபாய்’ ஆகிய புத்தகங்களைத் தந்தார்.
காசு கொடுத்தபோது வாங்க மறுத்தார். ரொம்ப வற்புறுத்தி கொடுக்க நான் முனையவில்லை.காரணம் அன்று பர்ஸில் ஒரு குவார்ட்டர் மற்றும் சிகரட் பாக்கெட் வாங்கும் அளவுக்கே காசு இருந்தது. இன்னொரு காரணம் மணிகண்டன் சாஃப்ட்வேர் துறையில் சம்பாதித்துக்கொண்டே பார்ட் டைமாக எழுதுபவர். சாஃப்ட்வேர் எழுத்தாளர்கள் பற்றி ஹார்ட்வேர் அபிப்ராயம் கொண்டவன் நான்.[ ப்ளீஸ் நோட் இட் மிஸ்டர் செல்லமுத்து குப்புசாமி.]

அன்று இரவு சன் டி.வி விவாத மேடைக்கு ’வா’ என்று மணிகண்டனுக்கு திடீர் அழைப்பு வந்ததால் ‘இரவு வெளிய போகலாம்’ என்று அவர் சொல்லியிருந்த ’ரகசியத்திட்டம்’ தள்ளிப்போடப்பட்டு, ஸ்டாலை விட்டு விரைந்தே வெளியே வந்தேன்.

தோழர் ரேவதி தவிர அன்று இலக்கியவாதிகள் யார் கண்ணிலும் படாமல் வண்டியை ஸ்டார்ட் பண்ணிய போது ‘ஆண்டவன் இருக்காண்டா கொமாரு’ என்று  சொல்லிக்கொண்டேன்.

மணிகண்டனை சந்திக்கச்சென்றதும், அவரது புத்தகங்களை வாங்கிக்கொண்டு வந்ததும் ஒரு ‘காரணமாகத்தான்’.

மறுநாள் ஞாயிறன்று முழுமூச்சாக இரண்டு புத்தகங்களையும் வாசித்துமுடித்தவுடன் மணிகண்டனுக்கு நான் அனுப்பிய மெயில் இது...

அன்புள்ள மணிகண்டன்
நேற்று ‘மசால் தோசையும் இன்று ‘மாரியப்பனையும் வாசித்து முடித்தேன். மொத்த எழுத்துக்களையும் மனசுக்கு நெருக்கமாக உணரமுடிந்தது. இரண்டின் எல்லா எழுத்துக்களிலுமே நீங்கள் இருந்துகொண்டே இருப்பதால் உங்கள் ‘பயஃகிராபி’ படித்தது போல ஒரு உணர்வு. குறிப்பாக மசால்தோசை பதிவுகளை சிறுகதைகள் போலவே சொல்லியிருப்பது ஆச்சர்யமூட்டியது. எதையும் நீட்டி முழக்காமல் கொஞ்சமே கொஞ்சமாக எழுத வாய்த்திருப்பது வரம். சுஜாதா உங்களுக்குள் ஸ்ட்ராங்காக குடியிருக்கிறார்.

சமீப வருடங்களில் நான் வாசிக்கும் பழக்கத்தை ஏறத்தாழ துறந்திருந்தேன். ‘மானசரோவர்’ பாட்டிசைக்கும் பையன்கள்’ குட்டி இளவரசன்’ அந்நியன்’ ஜமீலா’ போன்ற சிலவற்றை அடிக்கடி படிப்பேன். மற்றபடி புது எழுத்துக்கள் அவ்வளவாக வாசிக்க முடியவில்லை அல்லது மனநிலை இடம் தரவில்லை என்றும் சொல்லலாம்.
உங்கள் இந்த புத்தகங்கள் ’காரணமாக’ வாசிக்க ஆரம்பித்தது. உங்கள் ப்ளாக் ரெகுலராக படித்திருந்தும் இவற்றை எப்படி மிஸ் பண்ணினேன். இப்படி எத்தனை சமீபத்திய நல்ல புத்தகங்களை படிக்காமல் விட்டிருக்கிறேன் என்றொரு மெல்லிய குற்ற உணர்வுக்கு ஆளானது உண்மை.
சரி, நம்ம கதைக்கு வருகிறேன். 

அது என்ன நம்ம கதை? புதுக்கதையால்ல இருக்கு?? என்கிற கேள்வி ஒன்று உங்களுக்கு இங்கே எழுந்தே ஆகவேண்டும்.

அதை நான் சொல்லமுடியாது. மணிகண்டன் சொல்லுவாரா என்று தெரியாது...

Friday, January 2, 2015

’குஷ்புவின் மனதை கொள்ளை அடித்தேனா?’

Anthanan Shanmugam குஷ்பு முன்னிலையில் தன்னை காங்கிரசில் இணைத்துக் கொண்ட அண்ணன் முத்துராமலிங்கனுக்கு காங்கிரஸ் பேரியக்கத்தை சேர்ந்த கோடானு கோடி தொண்டர்கள் சார்பில் பாராட்டுகள். இனி எந்நேரமும் இதே கலர் துண்டுடன் அவர் நடமாட தீர்மானித்திருப்பதாக கூறப்படும் தகவல்களில் உண்மை உண்டா என்பதை Elumalai Venaktesan அவர்கள் முத்துராமலிங்கனிடம் கேட்டு சொல்லுமாறும் கேட்டுக் கொள்கிறோம்...




 Elumalai Venaktesan Anthanan Shanmugam குஷ்பு இளம்பெண்ணாக சென்னை வந்தபோது, Muthu Ramalingam ஒரு புகைப்பட கலைஞனாக குஷ்புவின் மனதை கொள்ளையடித்த கதையை எங்கிருந்து ஆரம்பிப்பது.. மைக்கேல்,மதன, காம, ராஜ் என நாலா பக்கமும் சம்பவங்கள் உள்ளதே, இதில் எதை எடுப்பேன்..Vetri Vel...  

Vetri Vel முத்து அண்ணன் விருது வாங்கம் போது, வேறு எங்கோ பார்வையை திருப்பியதை வன்மையாகக் கண்டிக்கிறேன்..

Muthu Ramalingam Elumalai Venaktesan குஷ்பூ இளம்பெண்ணாக சென்னை வந்த போது ஐ யாம் ஸ்டடியிங் இன் ஒண்ணாங்கிளாஸ்.....ஹெஹே.. 

Elumalai Venaktesan தனிப்பதிவு தயாராகிட்டிருக்கு சார்.. ஏன் பொறக்கவே இல்லைன்னு சொல்லலாமே சார்... 

Elumalai Venaktesan Muthu Ramalingam நீங்க என்ன தில்லாலங்கடி வேலை காட்டினாலும் ஒரு காவியத்தை அரங்கேற்றாமல் விடப்போவதில்லை..
    •   
     
 ’புள்ள அடுத்த படத்தை இன்னும் கொஞ்சம் ‘வெவரமா’ எடுக்கட்டும் என்ற நல்லெண்ணத்தில், மக்கள் தொடர்பாளர்கள் டயமண்ட் பாபு, சிங்காரவேலு, மவுனம் ரவி, ரியாஸ் ஆகியோர் வருடா வருடம் நடத்தும் 'V4' விழாவில் அடியேனுக்கு ‘சிநேகாவின் காதலர்கள்’க்காக 2014-ன் சிறந்த புதுமுக இயக்குநர்  விருது கொடுத்து கவுரவித்தார்கள்.

தற்செயலாக எனக்கு விருது வழங்குபவராக தங்கத்தலைவி குஷ்பூ அமைந்துவிட, நண்பர்கள் ஃபேஸ்புக்கில் சற்று முன்னர் துவங்கியிருக்கும் கச்சேரியின் துவக்க பீடிகைகள் தான் மேலே இருப்பவை.

மேற்படி நண்பர்கள்லாம் குஷ்புவின் காதலர்கள்ங்குறதை தாங்களே எக்ஸ்போஸ் பண்ணிக்கிறாங்க.

நான் எவ்வளவு அடிச்சாலும் தாங்குறவன்னு நம்ம சமூகத்துக்கு நல்லாவே தெரியும்...கமான் ...ஸ்டார்... ம்யூசிக்...

’மூவி ஃபண்டிங் நிகழ்ச்சியில கரு. பழனியப்பன் பேசுன வீடியோ தேடிப்பாத்தேன். கிடைக்கல’ என்று சில நண்பர்கள் போனில் தொடர்ந்து கேட்க ஆரம்பித்தார்கள்..

அதன் யூடுப் லிங்க் இதோ;