Monday, November 3, 2014

'சவுண்ட் கேமரா ஆக்‌ஷன்’

’பட ரிலீஸுக்கு அப்புறம் உங்க புரடியூசரை மீட் பண்ணீங்களா?’
இயக்குநர்களைப் பார்த்து, மிக சாதாரணமாக, சக சினிமாக்காரர்கள் கேட்கும் கேள்வியில் எத்தனை அர்த்தங்கள் உண்டென்று இண்டஸ்ட்ரியில் இருப்பவர்களுக்கு மட்டும் தான் தெரியும்.
நானும் இந்தக்கேள்வியை ‘சிநேகாவின் காதலர்கள்’ ரிலீஸுக்குப் பின்னர் பலமுறை எதிர்கொண்டிருக்கிறேன்.
‘எப்பிடியும் கட்டி உருண்டிருப்பாங்க’ கேள்வியாளர்களின் மைண்ட்வாய்ஸ் பெரும்பாலும் இதுதான் என்பதையும் நான் அறிவேன்.
இந்தப்பதிவு அவர்களுக்கான பதிலாகவும், அத்தோடு நமது மூவி ஃபண்டிங் நெட்வொர்க்கிற்கான (www.moviefunding.in) அடுத்த முக்கிய நிகழ்வை அறிவிப்பதாகவும் இருப்பதில் மெத்த மகிழ்ச்சியடைகிறேன்.
உண்மையில் இத்திட்டம் குறித்து நானும் நண்பர் ஜெய்லானியும் முதலில் பகிர்ந்துகொண்டது எனது முதல்பட தயாரிப்பாளரும், தமிழன் தொலைக்காட்சி நிறுவனத்தின் உரிமையாளருமான திரு. கலைக்கோட்டுதயத்திடம் தான்.

சொல்லி முடிக்குமுன் அவர் கேட்ட முதல்கேள்வியே, ’இத்திட்டத்திற்கு நான் என்ன உதவி செய்யவேண்டும்?’ என்பதுதான். பதிலுக்கு நான் வைத்த கோரிக்கை குறித்து ஒருகணமும் யோசிக்காமல் உதவ முன்வந்தார். நான் அவரிடம் வைத்த கோரிக்கை ஒரு படத்தை எடுத்து முடிக்க அடிப்படையான கேமரா மற்றும் அது தொடர்பான அனைத்து உபகரணங்களும் [முழுவிபரங்களை இந்த லிங்க்-ல் பாருங்கள்: http://www.soundcameraaction.com/blackmagic-4k-camera-comp…/ ]
பணமாக பதினைந்து லட்சம் கேட்டு என் ‘ரூபச்சித்திர மாமரக்கிளியே’ படபட்ஜெட்டில் மேலும் ஒரு இருபது சதவிகிதவருவாயை உயர்த்தியிருக்கமுடியும்.
அதைவிட எனக்கு இது இன்னும் உகந்ததாக பட்டது. முதல்படியாக நண்பர் ஜெய்லானியின் ‘சவுண்ட் கேமரா ஆக்‌ஷன்’ படத்திற்கு, இந்த கேமரா உட்பட்ட உபகரணங்கள் முழுமையாய் பயன்படுத்த திரு.கலை அனுமதித்திருக்கிறார்.
நாளை நமது நண்பர்கள் சிலருக்கும் பாதி தள்ளுபடி வாடகைக்கு தர பயன்படலாம் போன்ற பல உத்தேசங்களுடனேயே நான் கேமராவாக வேண்டுகோளை வைத்தேன்.
அந்த வகையில் எனது படத்திற்கு கேமரா உள்ளிட்ட உபகரணங்களின் வாடகையாக ரூ 5 லட்சத்தை கலை அவர்களின் பங்களிப்பாகவும், நண்பர் ஜெய்லானியின் படத்திற்கு ரூ 4 லட்சத்தையும் ஏற்றுக்கொண்டு, பெரும் உதவிக்கரம் நீட்டியமைக்காக நன்றி தெரிவிக்கிறோம்.
இத்திட்டத்தின் உற்றதோழனாய் எங்களுடன் பயணித்து, தேவைப்பட்டால் இனியும் உதவிக்கரம் நீட்டத்தயாராய் இருப்பதாகவும் அவர் தெரிவித்ததையும் நண்பர்களுடன் பகிர்ந்துகொள்வதில் மட்டற்ற மகிழ்ச்சி.

No comments:

Post a Comment