Thursday, July 26, 2012

’நாலுமுழக் கயிறு வாங்கி கொரியர்ல அனுப்புங்க பாஸ்’



எனக்கு நெருக்கமான நண்பர்களிடம் என்னிடம் கேட்பதற்கு எப்போதுமே கேள்விகள் இருந்ததில்லை. ஏனெனில் அவர்கள் கேட்கவேண்டிய கேள்விகளுக்கான பதில்களை, என்னையும் விட அவர்களே நன்கு அறிந்தும் இருந்தார்கள்.

ஆனால் சமீப அறிமுக நண்பர்கள், அதுவும் குறிப்பாகப்ளாக்எழுதத்தொடங்கி, அதைப்படிக்க ஆரம்பித்த நண்பர்கள் என்னிடம் கேட்க ஏகப்பட்ட கேள்விகளுடன் அலைகிறார்கள் என்பதை கடந்த மூன்று மாதங்களில் தெரிந்துகொண்டேன்.

போனிலும், நேரிலும் பலமுறை அவற்றை எதிர்கொள்ளவும் செய்தேன். ‘கேள்வியின் நாய் அவனேஎன்று சிலர் என் குறித்து கமெண்ட் அடித்திருக்கவும் கூடும்.

என்ன பாஸ் நீங்க எழுதுற சினிமா விமர்சனத்தை படிக்கவா உங்க ப்ளாக் பக்கம் வந்தோம்?’ சினிமா விமர்சனம் உங்கள மாதிரி நூறுபேர் எழுதுறான். உங்க சொந்த வாழ்க்கை  அனுபவங்கள்  படிக்க சுவாரசியமா இருந்துச்சி. அதை அப்பிடியே த்ராட்டுல விட்டுட்டீங்களே?’’

நக்கீரன்’ ‘குமுதம்கோஷ்டிங்க, சினிமா ஆளுங்க யாராவது  மிரட்டுனாங்களா பாஸ்?’ அதுலயும் கோபால் கொஞ்சம் கோக்குமாக்கான ஆளாச்சே?’

‘;மோகம் முப்பது நாள். ஆசை அறுபது நாள். ப்ளாக் 90 நாள். இப்பிடி நிறைய பேரை பாத்துட்டேன் நண்பா?’

நான் சந்தித்த மொத்த கேள்விகளையும் மேற்படி மூன்று வகையறாக்களில் அடக்கிவிடலாம்.
இந்தக் கேள்விகளுக்கான பதில் ஒரு புறம் இருக்கட்டும் , ‘ப்ளாக்எழுத ஆரம்பித்து கொஞ்சம் கேப்பு விட்டாலும் ஆப்பு அடிக்க இத்தனை பேர் இருப்பார்கள் என்பது எனக்கு உண்மையிலேயே தெரியாது.

சொந்தக்கதை தொடராமல் போனதற்கு நீங்கள் கற்பனை செய்துகொண்டதுபோல் சுவாரசியமான காரணங்கள் எதுவும் இல்லை. பொதுவாகவே நான் ஒரு உலகமகா சோம்பேறி. எனது பழைய அனுபவங்கள் தொடர்பான ஆவணங்கள் எதையுமே நான் சேகரித்து வைக்கவில்லை.

சரி, எழுத ஆரம்பித்தபிறகு, நம்முடன் பணியாற்றிய சின்சியர் சிகாமணிகளிடமிருந்து சில தஸ்தாவேஜுகள் சிக்கக்கூடும். அப்படியே இரவல் வாங்கி தொடர்ந்துவிடலாம் என்ற ஒரு கணக்கு என்வசம் இருந்தது. அது சுமார் பத்து சதவிகிதம் கூட பலிக்கவில்லை.

நக்கீரன்அனுபவங்களை எழுத ஆரம்பித்தபோது என்னை மிகவும் உற்சாகப்படுத்திய ஆசிரியர் துரை, ‘என்னிடம் பழைய பிரதிகள் பெரும்பாலும் இருக்க வாய்ப்பிருக்கிறது. பரணில் தேடவேண்டும்என்று ஒரு பத்து நாட்கள் வரை இழுத்து மொத்தம் ஒன்பது பிரதிகளே  இருக்கிறது என்றபோது, ஏறத்தாழ 200 இதழ்களுக்கு வேலை பார்த்தோம். அதில் ஒன்பது இதழ்களை மட்டும் வைத்துக்கொண்டு என்ன செய்வது என்ற சலிப்பே மிஞ்சி, அவற்றைக்கூட இன்னும் வாங்கப்போகாமல் இருக்கிறேன்.

இந்த தற்காலிக இடைவெளிக்கான உண்மையான காரணம் இதுதான். மற்றபடி இதில் உள்குத்துவெளிக்குத்து என்று எதுவும் இல்லை.

ஆனாலும் ஒரு வெட்டிப்பயலின் கதையைப் படிப்பதற்கு இவ்வளவு ஆர்வம் காட்டிவரும் நண்பர்களே, உங்கள் மீது ஏற்பட்டிருக்கும் நன்றி மற்றும் பச்சாதாப உணர்ச்சிகளுக்காக மட்டுமே என் கதைவிரைவில் தொடரும் என்று என் குலதெய்வங்களான அக்கம்மா அழகம்மாக்கள் மீது சத்தியம் செய்கிறேன்.
ப்பவும் போல் நம்ம சினிமா பஞ்சாயத்துக்களுக்கே வருகிறேன்.
டிஜிட்டல் கர்ணன்ரிலீஸான முதல் ஷோவிலேயே பொட்டி மீரான் சாகேப் தெருவிற்கு திரும்பியிருக்கவேண்டுமோ என்று நினைத்து வருந்தும் அளவுக்கு கடந்த வாரம் ஒரே நாளில் இரண்டு எம்.ஜி.ஆர்.களை சந்தித்தோம்.

முதலாமவர் வாலிபன் சுற்றும் உலகம்என்று இரண்டு மணி நேரப் படமாக வந்து நம்மை நன்கு பாடம் பண்ணினார்.

இரண்டாவது எம்.ஜி.ஆரை சந்தித்தது பிரசாத் லேப்பில் சக்கரவர்த்தி திருமகன்ஆடியோ மற்றும் ட்ரெயிலர் ரிலீஸில்.

கர்ணன்நல்லா கல்லா கட்டியதைத்தொடர்ந்து, அதே போல் நாலு எம்.ஜி.ஆர் படங்களை ரிலீஸ் பண்ணினால் வரவேற்கலாம். ஆனால் மதுரை, சேலம் பகுதிகளில் எம்.ஜி.ஆர்.போல் மேக்கப் போட்டுக்கொண்டு மேடையில் ஆடிக்கொண்டிருந்தவர்கள் எல்லாம் முழுப்படம் நடிக்கவந்தால் எங்கே போய் முறையிடுவது என்றே தெரியவில்லை.மேலும் கொடுமையாக இவர்கள் தங்கள் கூடவே லதா, மஞ்சுளாக்கள், நம்பியார், அசோகன்களையும் அழைத்துக்கொண்டே திரிகிறார்கள்.

வாலிபன் சுற்றும் உலகத்தை, நானும் இரண்டு மணிநேரம் தேவிஸ்ரீதேவி தியேட்டரில் பொறுமையாக பார்த்தேன். அதற்கு விமரிசனம் எல்லாம் எழுதப்போவதில்லை. ஆனால் என் அருகே அமர்ந்திருந்த ஆறடி உயரம் கொண்ட ஆஜானுபாவான நண்பர் படம் தொடங்கி முடியும்வரை குலுங்கி குலுங்கி அழுதுகொண்டே இருந்தார்.

அவரை எப்படி தேற்றுவது என்று தெரியாமல் தவித்த நான், படம் முடிந்த உடன் உள்நோக்கம் எதுவுமின்றி,’’ பிரசாத்துக்கும் வர்றீங்கள்ல, அங்க ;சக்கரவர்த்தி திருமகன்ஆடியோ ரிலீஸ் இருக்கு. அதுல வேற எம்.ஜி.ஆர்’’ என்றேன் உற்சாகமாக.

அவரோ சைலண்டாக தனது பர்சை வெளியே எடுத்து ஒரு 20 ரூபாய் தாளை என்னிடம் நீட்டினார்.

‘’ நான் உயிரோட இருக்குறது உங்களுக்கு புடிக்கலைன்னு நல்லா தெரியுது. இந்த 20 ரூபாய்க்கு நாலு முழத்துல ஒரு கயிறு வாங்கி கொரியர்ல அனுப்புங்க. நான் வேணும்னா தொங்கிடுறேன்’’ என்றபடி என் பதிலுக்கு காத்திராமல் கிளம்பிப்போனார்.

அவரிடம் சொல்வதற்கு என்னிடம் இரண்டு விஷயங்கள் இருக்கின்றன

1.        இருபது ரூபாய்க்கு இரண்டு முழக்கயிறுதான் கிடைத்தது.

2.கொரியர்காரர்கள் இலவசமாக கயிறுகளை டெலிவரி செய்வதில்லை.

ஒரு எச்சரிக்கை: இந்த வாரத்தில், பார்த்து ரசித்து இன்னும் விமர்சனம் எழுதப்படாமல் சுழல்மாலைப்பொழுதின் மயக்கத்திலே’, ‘பொல்லாங்குமற்றும் ஷகீலாக்கா சரக்கடிக்கும் ஆசாமிஆகிய படங்கள் மனக்கிடங்கில் கிடந்து தவிக்கின்றன. அடுத்த 48 மணிநேரத்திற்குள் நீங்கள் எப்போது வேண்டுமானாலும் அட்டாக் செய்யப்படலாம்.

Saturday, July 14, 2012

’விமர்சனம் ‘பில்லா 2’ – ‘ஒவ்வொரு சீனும், ஒவ்வொரு ஃப்ரேமும் நானே சொதப்புனதுடா’




 படத்தை வெள்ளியன்று காலை 10 மணிக்கு 4 ப்ரேம்ஸ் தியேட்டரில் போட்டார்கள்.

பில்லா2’ துவக்க காலத்திலிருந்தே, பார்வதி ஓமனக்குட்டன் மற்றும் புருனா அப்துல்லா இருவரையும் ஸ்டில்களில் பார்த்தே நான் படு அப்செட். இவளுக ரெண்டுபேருமே ஃப்ளைட் புடிச்சி வந்து லவ் யூசொன்னாக்கூட நானே  திரும்பிப்பாக்க மாட்டேன்அப்புறம் எப்பிடி இவங்கள அஜீத் லவ் பண்ணி, டூயட் பாடி?
 

 படத்தின் இரு கதாநாயகிகளைப் பார்த்தபோது ஏற்பட்டிருந்த அவநம்பிக்கை, ரிலீஸுக்கு முந்தின நாள் அவசர அவசரமாக கூட்டப்பட்ட பிரஸ்மீட்டினால் இன்னும் சற்றே அதிகரித்திருந்தது.

அவர் அஜீத்துக்கு வேண்டப்பட்ட ஆள். அதனாலபில்லா2’ நல்லா இல்லைன்னா அதைஓஹோவுல தில்லா எழுத மாட்டாரு பாருங்களேன்என்று என் காதுபடவே சில கமெண்டுகள் வந்தன. அந்த கமெண்டுகள் வலுவாகும் வகையில் நேற்று என்னால் உடனே விமரிசனம் எழுதமுடியவில்லை.

படம் தந்த சோர்வு ஒருபுறமிருக்க, ஒரு நண்பரின் எதிர்பாராத மறைவு, அவரது இறுதிச்சடங்கில் கலந்துகொள்ளச்சென்றது என்று முழு வெள்ளியும் போய்விட்டது.

முன்பு ட்விட்டரில் விஜயை அதிகம் கலாய்த்துகொண்டிருந்தவர்கள், சமீபகாலமாக மெல்ல அஜீத்துக்கு ஷிஃப்ட் ஆகிவிட்டார்கள்.

அதில் பில்லா2’ படத்தின் சாயலில் இருந்த ஒரு ட்விட்டரை நான் மிகவும் ரசித்தேன். ’

நடிகன் அஜீத்தை விமரிக்க தகுதிகள் வேண்டியதில்லை. ஆனால் மனிதன் அஜீத்தை விமர்சிக்க தகுதிகள் வேணும்டா

 நான்பில்லா2’ வுக்கு விமர்சனம் எழுத வைத்துக்கொண்ட அளவுகோலும் இதுதான்.
இனி விமர்சனம் படிக்கலாம்.

ப்போது நான் நினைவூட்ட விரும்பும் ஒரு காட்சி, உங்களில் அநேகருக்கு தெரிந்திருக்க வாய்ப்புள்ளதுதான் எனினும், ஒரு காரண காரியம் கருதி மீண்டும் அதை லைட்டாக தொட்டுவிட்டு செல்வோம்

1983ம் ஆண்டு, ஜனவரி முதல் நாளன்று வெளியான கே. விஸ்வநாத்தின்சலங்கை ஒலியில் ஒரு காட்சி. பரத நாட்டியக்கலைஞரான கமல் ஒரு பூங்காவில் நாட்டியப்பயிற்சி எடுத்துக்கொண்டிருப்பார். அப்போது அவரை வாலண்டியராகப்போய் ஒரு சிறுவன் போட்டோ எடுப்பான். கமலும் அவனை நம்பி ஆசை ஆசையாய் போஸ் குடுத்து, மறுநாள் அவன் ஸ்டுடியோவில் போய்ப்பார்த்தால்,… ஒரு ஸ்டில்லில் கமலின் கை மட்டும் இருக்கும்இன்னொன்றில் கமலின் பாதம் மட்டும் இருக்கும்மற்றொன்றில் கன்னத்தில் ஒரு கொசுவை அடித்துக்கொண்டிருப்பார்.

‘’டேய் டேய் ஒரு ஸ்டில்லைக்கூட ஒழுங்கா எடுக்காம இப்பிடி அநியாயம் பண்ணிட்டியேடா’’ என்று கமல் அந்தப்பொடியனை அடிக்க முயல, அவனோ சாமர்த்தியமாக ஓடி தனது தந்தைக்கு பின்னால் ஒளிந்துகொள்வான்.
 

அந்தப் பையனின் பெயர்தான் சக்ரி டோலட்டி

நேற்று ரிலீஸாகி, அஜீத் ரசிகர்களை வெலவெலத்துப்போக வைத்திருக்கிறதேபில்லா2’ அந்தப்படத்தின் இயக்குனர்.

29 வருடங்களுக்கு முன்பு, உங்களையும் என்னையும் போல் ஏதோ ஒரு தியேட்டரில் அமர்ந்துசலங்கை ஒலியை ரசித்த அஜீத்துக்கு தெரிந்திருக்குமா, ஒரு ஸ்டில்லையே ஒழுங்காக எடுக்கத்தெரியாத பையன்தான் 2012-ல் 1,85,760 ஸ்டில்களைக் கொண்டபில்லா2’ என்ற படத்தை  எடுக்கப்போகிறான் என்பது?

இதைத்தான் விதி வலியது என்கிறார்களோ?  

டேவிட் பில்லா, ஒரு அகதியாக, வரும்போதே, ரொம்ப அசதியாக ஒரு முகாமில் இறங்குகிறார்.
அவர் அசதியாக இருப்பது தெரியாமல், ‘அம்மா பேரு, அப்பா பேரு கேள்விகேட்கும் அதிகாரி மேல் அவருக்கு கோபம் கோபமாக வருகிறது. அடுத்த காட்சியில் அவருக்கு ஒரு கடத்தல் வேலை கிடைக்கிறது. அதற்கும் அடுத்த காட்சியில் பெரிய டான் ஒருவருக்கு ரைட் ஹேண்டாக மாறுகிறார். இடைவேளையில் தனி டாணாக மாறுகிறார். அதுவரை அவர் சுட்டுத்தள்ளிய  மனித உயிரினங்களின் எண்ணிக்கை சுமார் ஐநூறைத்தாண்டியிருக்க, உயிரைக்கையில் பிடித்தபடி வெளியேறுகிறோம்.

படத்தின் முக்கிய அம்சமாக நான் கருதுவது சுமார் 20 பக்க நோட்டுக்குள் அடங்கிவிடக்கூடிய வசனங்கள். அதில் பத்தொன்பதரை பக்கங்கள் ஆங்கிலம்,ரஸ்யா, இந்தி போன்ற மொழிகளில் இடம் பெற்றிருப்பது

அதிலும் அவ்வப்போது கீழே தமிழில் போடப்படும் சப்-டைட்டில்களில், பில்லா என்பதைக்கூட அல்லா என்று எழுதிவிடுவார்களோ என்று நெஞ்சைப்பிடித்துக்கொள்ளுமளவுக்கு,  எக்கச்சக்கமான ஸ்பெல்லிங் மிஸ்டேக்ஸ்.

பில்லா டேவிட் உட்பட படத்தில் இடம்பெறும் அத்தனை கேரக்டர்களுமே, ஏதோ வனாந்திரத்திலிருந்து பிடித்துவந்து விட்டது போல முன்கதை, பின்கதை எதுவுமில்லாமல் அந்தரத்தில் கிடக்கிறார்கள்

கிளாமருக்காகவோ அல்லது டாண்கள் உலகத்தின் செட் புராபர்ட்டியாக இருக்கட்டும் என்று நினைத்தோ படத்தின் பல காட்சிகளில் ஜட்டியோடே அலையும் குட்டி புரூனா அப்துல்லாவும், பில்லாவின் அக்கா மகளான பார்வதி ஓமனக்குட்டனும் என்ன காரியமாக அங்கங்கே நடமாடி, அவ்வப்போது நடனமாடினார்கள் என்று கடைசிவரை விளங்கவேயில்லை.

கேரக்டருக்காவா அல்லது பொதுவாகவே சினிமாவின் மீது, பணத்தின் மீது வெறுப்பு வந்துவிட்டதோ தெரியவில்லை. படம் முழுக்க டல்லா2 வாகவே காட்சியளிக்கிறார் அஜீத். பஞ்ச் டயலாக் என்ற நினைப்பில் அவர் பேசும் அத்தனை டயலாக்குகளும் ஏதோ பஞ்சத்துக்கு எழுதப்பட்டது போல் அத்தனை வறட்சி.

யுவனின் பின்னணி இசை தவிர்த்து,ஒளிப்பதிவு, படத்தொகுப்பு, அத்தனையிலும்   டெக்னிக்கலாக, இந்த 2012-லும் இவ்வளவு திராபையாக ஒரு படம் இயக்க முடியுமெனில் அது, 29 வருடங்களாக இன்னும் சற்றும் வளராத இந்த குட்டிப்பையன் சக்ரி, துக்கிரி, பக்கிரியால் மட்டுமே முடியும்.



அந்தவகையில்பில்லா2’ கதை, திரைக்கதையில் துவங்கி, ஒவ்வொரு விசயமும், ஒவ்வொரு சீனும், அவ்வளவு ஏன் ஒவ்வொரு ஃப்ரேமும் சக்ரியே சொதப்புனதுடா.’