Wednesday, February 15, 2012

அவர் வைரமுத்து,...நான் எப்போதுமே அவரை வய்யிற முத்து...

திகில் முருகன்,ஜான்சன்,மவுனம்ரவி,வீ.கே.சுந்தர்,விஜயமுரளி,ஜான்,டயமண்ட் பாபு  போன்ற முன்னணி பி.ஆர்.ஓ.க்களெல்லாம் கோபித்துக்கொள்ளக்கூடாது.

என்னைப்பொறுத்தவரை, எப்போதுமே தமிழ் சினிமாவின் நம்பர் ஒன் பி.ஆர்.ஓ. யாரென்று கேட்டால் நான் கவிப்பேரரசு வைரமுத்துவின் பெயரைத்தான் சொல்லுவேன்.

எல்லா பத்திரிகை நிருபர்களையுமே குடும்ப நலம் விசாரிக்கிற அளவு நெருக்கம்,தொடர்ந்து தன்னைப்பற்றிய பாஸிடிவான செய்திகளை கைப்பட எழுதி நிருபர் பெயரிலேயே போட வைக்கிற சாமர்த்தியம், தான் சம்பந்தப்பட்ட படங்களின் செய்திகளை வரவழைத்து பாட்டு எழுத வாய்ப்புக்கொடுத்த  டைரக்டர்களின் மனம் குளிர்விக்கிற லாவகம், ஏதாவது சிறு காண்ட்ரவர்சி தன்னைப்பற்றி வந்தால் கூட நிர்வாகத்தின் தலைமைக்கு போன் செய்து,அதை எழுதியவருக்கு 'குண்டு'  வைக்கிற சாதுரியம்..

இதெல்லாம் மேற்படி பி.ஆர்.ஓ.க்கள் யாரிடமும் வைரமுத்து அளவுக்கு இல்லை என்பதை அவர்களே ஒப்புக்கொண்டு இந்நேரம் ஒதுங்கியிருப்பார்கள்.

இப்ப என்னாத்துக்கு இந்த மேட்டர்? என்று நீங்கள் கேட்பது கேட்கிறது.

இந்த வாரக் ‘குமுதம்’ படித்திருந்தால் இந்தக்கேள்வியை பாதிப்பேர் கேட்க மாட்டார்கள்.இருந்தாலும் மீதிப்பேருக்காக..

சும்மாவே வைரமுத்துவின் பேட்டியில் தற்பெருமை தாண்டவமாடும் என்றாலும், 60 க்கு மேல கிறுகிறுப்பு என்பதை நீரூபிப்பது போல், இந்தப்பேட்டியில் பெருமையை கொஞ்சம் ஓவராகவே பீத்தியிருக்கிறார் கவிப்பேரரசு.

சொந்த வேலைகள் காரணமாக கொஞ்சம் சொங்கிப்போயிருந்தவர், இந்த ஆண்டு மீண்டும் நிறைய்ப்பாடல்கள் எழுதும் எண்ணத்தோடு இருக்கிறாராம்.அதனால் பாடல் எழுத வாய்ப்புக்கொடுப்பவர்கள், ,கபிலனுக்கொன்று,சினேகனுக்கென்று என்று பாடல்களை 'காக்காக்கடி' கடித்து  பங்கு பிரித்துக்கொடுத்துவிடாமல்,மொத்தமாக’  எனக்கே எனக்கென்று கொடுத்து விடுங்கள் என்கிறார்.

அதற்கு என்ன காரணமாம்?

மொத்தப்பாடல்களும் எழுதும்போது படத்தோடும் இயக்குனரோடும் ஒரு பந்தம் நேர்ந்து விடுகிறதாம்.படத்தின் பாத்திரங்களோடு, இவரது குழம்பும்,கூட்டும்,குருமாவும் சேர்ந்து பயணம் செய்வதால்,வேறு யாருக்கும் அந்தப்படத்தின் பாடல் போகாதது தெரிந்தால்தான் , ஒழுங்காக சயனம் வருகிறதாம்.

அடுத்து திரைத்துறையில் யாரை நேசிக்கிறீர்கள் ?
என்ற கேள்விக்கும் அதே பதில்தான் வருகிறது கவி BORE அரசுவிடமிருந்து...

மொத்தப்படத்தின் பாடல்களையும் என்னை நம்பி ஒப்படைக்கும் இயக்குனர்களையும், பேமெண்ட் தந்து விட்டு செக்கை பவுன்ஸ் பண்ணாத தயாரிப்பாளர்களையும்தான் கவிஞருக்கு ரொம்பப்புடிக்குமாம்.

கவிஞருக்கு இன்னொரு 50 வருடம் கழித்தாவது  ’ரிடையர்’ ஆகும்  எண்ணம் இருக்கிறதா?
என்று கேட்டால்,ஏதோ சினேகன் தேசிய விருதை வாங்கி விட்டதாகக்கேள்விப்பட்டமாதிரி  மாதிரி சினம் கொள்கிறார்.

எனது படைப்பாற்றலின் கடைசிச்சுடர் அணையும் வரை எழுதிக்கொண்டே இருப்பேன். அல்லது என்னைத்தாண்டும் ஒருவன் வரும்வரை.

இப்போது பாடல் எழுதுகிறவர்களின் எண்ணிக்கை மலைப்பாக இருக்கிறதே ஒழிய,trend setter' எனக்கூடிய என்னைப்போல் தடம் பாதித்தவர்கள் யாரையும் காணோம்.வெறும் ஓசைகளின் பள்ளத்தாக்கை இட்டு நிரப்பும் பொருளாக பாடல் வரிகள் ஆகிவிட்டன.

பாடல் என்பது தாயின் மார்பில் சுரக்கும் பாலாக இருக்க வேண்டும். ஆனால் இப்போதைய கவிஞர்களின் பாடல்களோ எந்திரத்தின் இடுக்கில் கசியும் எண்ணெயாக ஆகிவிட்டது.’


என்று தன்னைத்தவிர, தன் சொந்தப்பிள்ளை உட்பட அனைவரையுமே கங்கணம் கட்டிக்கொண்டு கலாய்க்கும் கவிபோர் அரசு, இப்போது  மணிரத்தினத்தின் ‘கடல்’ படத்துக்கு தனது ‘வைரமுத்து கவிதைகள்’ தொகுப்பிலிருந்து இரண்டு கவிதைகளைப் பாடல்களாக்க கொடுத்திருக்கிறாராம்.

அந்த இரண்டு பாடல்களுமே, தமிழ்சினிமா கடந்த பத்தாண்டுகளில் கண்ட சிறந்த பாடல்களாம்.

கொஞ்சமும் கூச்ச நாச்சமின்றி மீண்டும்  இப்படி தனக்கு தானே பி.ஆர்.ஓ. வேலை பார்க்கத்தொடங்கி விட்டார் வைரமுத்து.

இனி நா.முத்துக்குமார் போன்றவர்கள் வருஷக்கடைசியில், போன வருஷம்,நான் தான் அதிகபட்சமாக 48 படங்களில் 111 பாடல்கள் எழுதினேன் என்று பிரஸ் ரிலீஸ் எழுதி பெருமையடித்துக்கொள்ள முடியாது.ஏனென்றால்....

மூட் இருந்தா பழையபடி  முதல் இரண்டு  பாராவ மட்டும் படிங்க..


கவிப்பேரரசு வைரமும்,எலக்கியப்பேரரசு எஸ்.ராவும் சமீபத்துல ஒரு ஃபங்சன் ல சந்திச்சிப்பேசுனதை ஒட்டுக்கேட்கிற பாக்கியம் ஒரு நண்பரின் பாழடந்த காதுக்கு கிடைத்தது.

எஸ்.ரா: என்ன கவிஞரே ஆனந்த விகடன் -ல நீங்க எழுதுற ‘ மூன்றாம் உலகப்போர்’ தொடர்  பெரிய அக்கப்போர்ன்னு பேசிக்கிறாங்களே?

வயிரம்: ஏன் ஜூனியர் விகடன் -ல நீங்க எழுதுற ‘ எனது இந்தியா’ கூட படிச்சி நொந்தியாங்கிற மாதிரி இருக்குன்னு தான் பேசிக்கிறாங்க.

எஸ்.ரா: சரி சரி விடுங்க.. புலவர்களுக்குள்ள சண்டை எதுக்கு?  ஒட்டுமொத்தமா  நம்ம மேட்டர்கள் முந்தி மாதிரி பேசப்படலைன்னு பொதுவான ஒரு கருத்து இருக்கு.

வயிரம்: விகடனே முந்தி மாதிரி பேசப்படலைன்னு ஒரு கவுண்டரைத் தட்டிவிடுங்க .அப்புறம் நமக்கெதிரா ஒரு பய வாயைத்தொறக்க மாட்டான். ஹா..ஹா.. ஹா..

இருவரும் எகத்தாளமாக சிரிக்க ஆரம்பிக்க, நண்பர் காதைக்காப்பாற்றிக்கொள்ள தப்பி ஓடுகிறார்.

1 comment:

  1. வைர‌முத்து, க‌லைஞரின் (மனோக‌ரா த‌மிழ்) பால் உண்டுதான், க‌விஞரானாதாய் க‌லைஞர் மேடையில் இருக்கும் போதெல்லாம் சாற்றுவார். அத‌னால் அவ‌ரின் ஜீன்/குண‌ங்க‌ள் இவருக்கும் அப்ப‌டியே வ‌ந்து விட்ட‌தோ?

    ReplyDelete