Friday, December 9, 2011

யாரோடது அந்த காண்டம்?

சில மாதங்களுக்கு முன்பு திரைக்குவந்து, வந்தசுவடு தெரியாமல் மீண்டும் பெட்டிக்குள் படுத்துக்கொண்ட படம் ‘ஆரண்ய காண்டம்’’.எஸ்.பி.பி.சரண் தயாரிப்பில் வந்த இந்தப்படத்தை குமாரராஜா என்ற புதுமுகம் இயக்கியிருந்தார். ரொம்பப்புதுமையான முறையில்,இந்தி நடிகர் ஜாக்கிஷெராபின் முழு நிர்வாணகாட்சிகளும் படத்தில் இடம் பெற்றிருந்தன.
இப்ப என்னாத்துக்கு அந்த பழைய நியூஸு ?
தோல்விப்படம் தந்த சில டைரக்டர்கள் அதை ஒத்துக்கொள்ள மனமில்லாமல் மக்கள் ரசனையின் மீது பழியைப்போடுவார்கள். இந்த ‘காண்டம்’ குமாரசாமி அந்த ரகம்.தான் சர்வதேச தரத்தில் படம் எடுத்ததாகவும்,அதை தயாரிப்பாளர் சரண் சரியான முறையில் மக்களிடம் கொண்டுபோய் சேர்க்கவில்லை என்று புலம்பிக்கொண்டிருந்தார்.சரண் அதைக்கண்டுகொள்ளவில்லை.
சர்வதேசம் சர்வதேசமென்று சுற்றிக்கொண்டிருந்த குமாரராஜா, சென்னையில் வரும் 14ம் தேதி துவங்கி 22 வரை நடைபெற இருக்கும் சர்வதேச திரைப்பட விழாவில் எப்படியாவது தனது படத்தை திரையிட்டு விடவேண்டும் என்று துடியாய்த்துடித்தார்.
படத்தின் பிரிண்டுக்காக பலமுறை அலையவிட்ட சரண், கண்ட சோனாகீனால்லாம் என்னை தரைமட்டத்துக்கு பேசுற அளவுக்கு காலி பண்ணினதே நீ தானடா..உனக்கு சர்வதேச விருது ஒரு கேடா? என்று அடித்து விரட்டாத குறையாக வெறுங்கையோடு அனுப்பிவைத்தாராம்.
வுடுங்ணா இந்த காண்டத்துல வுட்டத அடுத்த காண்டத்துல புடிப்போம்.

No comments:

Post a Comment