Friday, December 9, 2011

கோச்சடையான்’ என்று ஒரு படமே கிடையாது’’

மருத்துவமனையில் இருந்து திரும்பும்போது ரஜினிக்கு டாக்டர்கள் சொன்ன முக்கியமான அட்வைஸ் ,இனி சினிமாவைப்பத்தி நினைக்காதிங்க’ என்பதுதான்.
தனது மீதி வாழ்க்கையை நல்ல ஓய்வுடன் நிம்மதியாகக் கழிக்கவே ரஜினியும் விரும்பினார். ஆனால் 'சுல்தான் தி வாரியர்’ எடுக்கிறேன் பேர்வழி என்று பெரும் கடன்சுமைக்கு ஆளாகியிருந்த தனது மகள் சவுந்தர்யாவை மீட்க ஆரம்பிக்கப்பட்ட ‘ராணா’வைத்தொடர வாய்ப்பில்லை என்று தெரிந்ததும் ரஜினி கன்பியூஸ் ஆக ஆரம்பித்தார்.இந்த கேப்பில் ,ஃபைனான்சியர்கள் மீண்டும் சவுந்தர்யாவுக்கு நெருக்கடி கொடுக்க ஆரம்பித்தார்கள்.
இதை சமாளிக்க ரஜினியின் அனுமதி இல்லாமலே புனையப்பட்ட கப்ஸா’தான் ‘கோச்சடையான்’.
இந்த கோச்சடையான் செய்திகள் திசைக்கு ஒரு டைப்பாய் வந்தபோது, முதலில் மீடியா மீது எரிச்சலடைந்த ரஜினி, இதன் பின்னணியில் மகள்தான் இருக்கிறார் என்று தெரிந்ததும், விரக்திச்சிரிப்போடு மவுனமாகி விட்டாராம்.
லேட்டஸ்ட்டாக, இல்லாத ஒரு படத்துக்கு நான் ஏன் டைரக்டரா இருக்கணும் என்று கே.எஸ் ரவிக்குமார் ஒதுங்கிக்கொள்ள, 3’ படத்தை இயக்கிவரும், ஐஸ்வர்யாவே இதையும் இயக்குவார் என்று புது புரளியைக் கிளப்பி விட ஆரம்பித்திருக்கிறார்கள்.
இதில் பெரிய கொடுமை, ஸ்நேகா ரஜினியின் தங்கையாக நடிக்கிறார் என்று ஒரு கிசுகிசு  கிளம்பி போய்க்கொண்டிருக்கும்போதே,ஷ்ரேயா கொழுந்தியாளாக நடிக்கிறார் என்று இன்னொரு செய்தி கிளம்பும்.அதற்கு அந்த நடிகைகள் பதிலும் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்.சில பத்திரிகைகள் புத்திசாலித்தனமாக யோசிப்பதாக நினைத்துக்கொண்டு ;கோச்சடையான்’ பெயரில் தொடர் வேறு ஆரம்பிக்கிறார்கள்.
இல்லாத படத்துக்கு எத்தனை வதந்திகள்? கோச்சடையான் ஒரு நோ’ ச்சடையான் தான் என்பதை விரைவில் ரஜினியே அறிவிப்பார்.

No comments:

Post a Comment