Friday, December 30, 2011

மகான் கணக்கு-விமரிசனம்.கணக்கு,பிணக்கு,ஆமணக்கு

 பன்னி பல குட்டி போட்டமாதிரி இந்த வெள்ளியன்று மட்டும் மூனு டப்பிங் படங்களையும் சேர்த்து மொத்தம் பதின்மூன்று படங்கள் ரிலீஸாகியிருப்பதாக தகவல் சொன்னார்கள்.

எல்லாப்படங்களுக்குமே அழைப்பு இருந்தும்.வருஷக்கடைசியில் வருத்தமான வாழ்க்கை வேண்டாமே என்று அந்தப்படங்கள் போட்ட தியேட்டர்கள் இருக்கிற திசையைக்கூட நான் திரும்பிப்பார்க்கவில்லை.


நேற்று கொஞ்சம் ஃப்ரியாக இருந்ததால் ‘பதினெட்டான்குடி’ என்ற படத்தை இடைவேளை வரை பார்க்க நேர்ந்தது.
நேர்ந்தது என்று எழுதும்போதே என் கதை தீர்ந்தது என்பதையும் புரிந்து கொண்டிருப்பீர்கள்.படத்தில் மொத்தம் பதினெட்டு இடங்களில் குடிக்கிறார்கள். இனிமே எங்களைப்பார்க்க வருவியா என்று ரசிகர்கள் மண்டையில் ‘மடேர் மடேர்’ என்று அடிக்கிறார்கள் என்பதைத்தாண்டி இந்தப்படத்தைப் பற்றி எழுதி உங்கள்
பழி பாவத்துக்கு ஆளாக விரும்பவில்லை.
இன்று மாலை’ மகான் கணக்கு’ என்று சென்சாரால் பெயர் மாற்றம் செய்யப்பட்ட’காந்தி கணக்கு’ படம் பார்த்தேன்.இடைவேளைக்குப்பிறகு சுமார் பத்துக்கும் மேற்பட்ட இடங்களில் பத்திரிகையாளர்கள் கைதட்டிக்கொண்டே இருந்தார்கள். அதனால் இதை ஒரு நல்ல படம் என்று நான் சொல்ல வரவில்லை.
ஆனால் இந்தப் படம் பேசப்படவேண்டிய படம் என்பதில் எந்த சந்தேகத்துக்கும் இடம் இல்லை.
படத்துக்காக டைரக்டர் தொட்டிருக்கும் மேட்டர் அப்படிப்பட்டது.
‘’ மாப்ள மயித்தைக்கட்டி மலையை இழுப்போம். வந்தா மலை.போனா மசுரு’ மதுரைப்பக்கம் ரொம்ப பேமஸான இந்த டயலாக்கைத்தான் டைரக்டர் செயல்படுத்தியிருக்கிறார்.
அவர் வம்பிழுத்திருக்கும் மலை ஐ.சி ஐ.சி வங்கி.
கதை இதுதான். ஹீரோ ரமணாவின் மாமா  அவரை  நன்றாக படிக்க வைப்பதற்காக ஓசிஓசி வங்கியில்
லோன் வாங்குகிறார்.லோனை அவர் ஒழுங்காக கட்டிய பிறகும், பல பித்தலாட்ட வேலைகள் செய்து, லேட் பேமெண்ட், வட்டி, அதுபோடும் குட்டி போன்றவைகளை கட்டச்சொல்லி,  அடியாட்களை வைத்து அவரை டார்ச்சர் செய்கிறது ஓசி ஓசி வங்கி.
இதனால் ரமணாவின் மாமா, அக்கா ஆகியோர் தங்கள் குழந்தையுடன் தற்கொலை செய்து கொள்கிறார்கள்.இடைவேளை.
இதன்பின் குறுக்கு வழியில் கோடிக்கணக்கில் கடன் வாங்கி ஓசிஓசி வங்கியை ஏமாற்றி கடன் வாங்கி அவர்களின் பித்தலாட்டங்களை கோர்ட்டில் அம்பலப்படுத்துகிறார் ரமணா.
கதை என்ற வார்த்தையைக்கூட பயன்படுத்த முடியாது. டைரக்டர் சம்பத் ஆறுமுகம் எடுத்துக் கொண்டிருக்கும் ‘மேட்டர்’ உண்மையிலேயே சூப்பர்தான்.
அடியாட்களைக் கொண்டு தனியார் வங்கிகள் நடத்தும் அடாவடித்தனத்தை செருப்பால் அடித்திருக்கிறார் என்று சொன்னால் மிகையில்லை. இதை ஒரு சுவாரசியமான கதையாக மாற்றுவதில் அவருக்கு சாமர்த்தியம் போதவில்லை .
‘’இந்தியா கூட தான் உலக வங்கியில கடன் வாங்கியிருக்கு. அதுக்காக தினமும் நாலு ரவுடிகளை
பார்லிமெண்டுக்கு அனுப்புனா எப்பிடி நிம்மதியா ஆட்சி நடத்த முடியும்? என்ற வசனம் ஒரு சில்வர் ஜூப்ளி தரக்கூடிய உதவி இயக்குனர் யாரோ சம்பத்திடம் இருக்கிறார் என்று சொல்கிறது.
மற்றபடி மேக்கிங்கில் மிகச்சாதாரணமான படம்தான்.
 ராஜபாட்டையில் பல கெட் அப் போட்டதால், தன் ஒரே சொந்த கெட் அப்பையும் மறைத்துக்கொண்டு விக்ரமே தலைமறைவாக அலைவது தெரியாமல், ரமணவும் ஒரு பாடலில் பல கெட் அப்புகளில் காட்சி அளிக்கிறார்.தாங்க முடியலைடா சாமியோவ்.
 கதாநாயகியை எங்கே கண்டெடுத்தார்கள்: என்பது தெரியவில்லை.பிரம்மா தயாரிப்பு பணியில் ஈடுபட்டுக் கொண்டிருக்கும்போது பாதியில் பூலோகம் கொண்டுவந்துவிட்டதைப்போல ஏகப்பட்ட manufacturing defuct' டுடன் இருக்கிரார். சும்மா தொட்டுக்க’ மட்டும் அவ்ரைப்பயன்படுத்தியிருக்கிறார்கள்
வெள்ளைக்காரர்கள் முன்பு வியாபாரம் செய்யவந்து நம்மை அடிமைப்படுத்தியதுபோல், இப்போது அந்நிய நாட்டு வங்கிகள் நம்மை நாஸ்தி பண்ண வந்திருக்கின்றன என்ற மலை போன்ற கருத்தை .............கட்டி இழுத்ததற்கு பதில் கொஞ்சம் நல்ல கயிரு கட்டியே இழுத்திருக்கலாம் இயக்குனர்.

No comments:

Post a Comment