Wednesday, December 14, 2011

கொதித்தது இயக்குனர் சங்கம்...குதித்தது புறக்கணிப்பில்...




இன்று துவங்கி எட்டு நாள் நடைபெறவிருக்கும் சென்னை சர்வதேச திரைப்பட விழாவை நடிகர் விவேக் பாணியில்‘ சென்னை  போடா வெண்ணை’ என்றபடி புறக்கணிக்கிறது தமிழ்நாடு திரைப்பட இயக்குனர் சங்கம்.
இந்தோ பிலிம் அப்ரிசியேஷன் கமிட்டி என்ற ஒரு அமைப்பை,  ஹாசினி சினிமாஎன்ற பெயரில் பல சமயங்களில் காமெடி சினிமா வழங்கும் சுஹாசினி மணிரத்தினமும் ,இன்னும் சில ஆழ்வார்ப்பேட்டை ஐயங்கார்களும் நடாத்தி வருகிறார்கள்.

இதன் 9 வது திரைப்பட விழாவைத்தான் இயக்குனர் சங்கம் புறக்கணிக்கிறது.
உலக அளவில் 44 நாடுகளின் 154 படங்களும், தமிழில்’ஆடுகளம்’மைதானம்’ எங்கேயும் எப்போதும்’,அவன் இவன்’வாகைசூடவா’,கோ’தெய்வத்திருமகள்’’முரண்.’வர்ணம்’,’தூங்காநகரம்’மற்றும்
வெங்காயம்; ஆகிய படங்களும் திரையிடப்படுகின்றன.

இந்த விழாவில்,தனது ‘தென்மேற்குப்பருவக்காற்று’படமும் இடம் பெற வேண்டுமென்று இயக்குனர் சீனு ராமசாமி எவ்வளவோ முயற்சித்துப்பார்த்தார்.

‘’ வெப்-சைட்டுல விளம்பரம் குடுத்தப்ப நீங்க ஏன்வரலை?’’ என்று சில அல்ப  காரணங்களை சொல்லி சுஹாசினி, சீனுவின் படத்தை திரையிட மறுத்துவிட்டாராம்.

இப்படி மறுக்கப்பட்ட ‘தென்மேற்குப்பருவக்காற்று’ கடந்த ஆண்டு தமிழுக்கு
மூன்று தேசியவிருதுகளை வாங்கித்தந்தது என்பதை யாரும் மறந்திருக்க முடியாது.

இதேபோல் அனுமதி மறுக்கப்பட்ட இன்னொரு படம் ‘செங்கடல்’.இந்தியன் பனொரமாவில் தேர்வு செய்யப்பட்ட‘ இயக்குனர் லீனாமணமேகலையின் இந்தப்படத்தையும் திரையிட சுஹாசினி மறுத்தார்..

‘’தேசிய விருதுகள் பெற்ற எங்கள் படத்தை திரையிட மாட்டீர்கள்.உங்களுக்கு தமிழக அரசின் மனியம் 25லட்சம் ஒரு கேடா’’ என்று கொந்தளித்த சீனு ராமசாமியும்,லீனா மணிமேகலையும், தங்கள் குமுறலை இயக்குனர்கள் சங்கத்தில் கொட்டினார்கள்.

இதற்கு சில தினங்கள் முன்பு,சுஹாசினியின் சித்தப்பா (அதாங்க நம்ம கமலு ) இயக்குனர் சங்கத்துக்கு, ஃபார்மலிடிக்கு ஒரு தகவல் கூட சொல்லாமல் ஒரு விழா நடத்தி வெறியேத்தியிருந்தார். சித்தப்பாவைக்கண்டித்து அப்போதே அறிக்கை விடலாமா என்று யோசித்துக்கொண்டிருந்தவர்களிடம்,
அதற்கும் சேர்த்து சித்தப்பாவின் பாப்பா வந்து மாட்டவே சற்றும் யோசிக்காமல் தில்லான முடிவை எடுத்தது இயக்குனர் சங்கம்.
ஒரு பருவக்காற்று இப்படி புயலாய் மாறும் என்று சற்றும் எதிர்பாராத சுஹாசினி,தனது கணவர் மணியை இயக்குனர் சங்கத்துக்கு தூது அனுப்பலாமா என்று யோசித்துக்கொண்டிருக்கிறாராம்.


பட்டணத்து ராணி...கெட்ட பின்பு ஞானி.

No comments:

Post a Comment