Sunday, December 18, 2011

எப்பொழுதும் வெட்டி கற்பனைகள்

சற்றுமுன்னர்தான்,’முப்பொழுதும் உன் கற்பனைகள்’ ஆடியோ வெளியீட்டு விழா பிரஸ்மீட் அட்டெண்ட் பண்ணி, பிரியாணி சாப்பிட்டுவிட்டு வந்தேன்.

 தினமலர்க்காரன் அடிக்கடி,’கோழிபிரியாணி நிருபர் சங்கம்’ என்று கிண்டல் பண்ணி வந்ததாலோ என்னவோ, இப்போதெல்லாம் பிரஸ்மீட்களில் கோழி பிரியாணியைப்பார்க்க முடிவதில்லை.
ஒன்லி மட்டன் பிரியாணிதான்.
 கோழி பிரியாணி என்றபோது விடாது கேலி செய்து வந்த தினமலர் பிரியாணி நிருபர், மட்டனுக்கு மாறியதும் எழுதுவதை நிறுத்தி விட்டார்.

தயாரிப்பாளரில் தொடங்கி, யங் மேஸ்ட்ரோ’ என்று தன்னைத்தானே அழைத்துகொள்ளும்,படத்தின் இசை அமைப்பாளர் ஜி.வி.பிரகாஷ் வரை எல்லோரும் கொஞ்சமாக பேசியது விழாவின் சிறப்பு அம்சம்.

 படத்தின் ட்ரைலரையும், இரண்டு பாடல்களையும் ஒளிபரப்பினார்கள். இதைப் பார்க்கும்போது படத்தின் தலைப்புக்கும், எடுத்திருக்கும் கதைக்கும் எந்த சம்பந்தமும் இருப்பதாகத்தெரியவில்லை.படத்தை முதலில் இயக்கி வந்த முரளி என்பவரை பேக் அப் பண்ணிவிட்டு படத்தின் தயாரிப்பாளர் எல்ரெட் குமாரே இயக்குனராகவும் ஆகிவிட்டதால் கதை என்று ஒன்று இருக்கிறதோ இல்லையோ  படம் முழுக்க பணத்தைக் கொட்டியிருப்பது தெரிகிறது.அதை திரும்ப எடுப்பதற்கான சாத்தியக்கூறு மட்டும்  ட்ரைலர் பாடல்கள் விளம்பர டிஸைன்கள் எதிலும் தெரியவில்லை.

அதர்வா பாலா படத்தில் நடித்துக்கொண்டிருப்பதால்,இந்த நிகழ்ச்சிக்கு வரமாட்டார் என்று பலரும் நினைத்திருக்க, தலையில். இதற்கு முன்னர் எங்கும் பார்த்திராத வினோதமான குல்லாய் ஒன்றை மாட்டிக்கொண்டு வந்திருந்தார் .(.பாலாவே தன் கைப்பட தைத்துக் கொடுத்திருக்க வாய்ப்பிருக்கிறது.)

 மாலை விமானத்தில் ,சிவகங்கை படப்பிடிப்புக்கு திரும்பி விடவேண்டும் என்ற கண்டிஷனோடு, அரை நாள் மட்டும் லீவு கொடுத்து அனுப்பி வைத்தாராம் பாலா.

அதர்வா மைக்குக்கு முன்னால் பேச எழுந்தபோது, எங்கிருந்தோ வந்து வேகமாய் மைக்கை பிடுங்கிய படத்தின் பீ.ஆர்.ஓ ‘திகில்’முருகன்,  அதர்வா பாலா படத்திலும் நடித்து வருவதால், இந்தப்படத்தைப்பற்றி மட்டும் கேள்விகளைக் கேளுங்கள் என்றார்.

 விடுவாங்களா நம்ம ஆளுங்க? ஒரு நிருபர்,
’’உங்க அப்பா வருஷத்துக்கு ஏழெட்டு படங்கள்ல நடிச்சார். நீங்க என்னடான்னா ரெண்டு வருஷத்துக்கு ஒரு படத்துலதான் நடிப்பீங்க போல இருக்கு? என்ற பொருள் பொதிந்த கேள்வியைக்கேட்டார்.

அந்த நிருபர் கேட்ட கேள்வியில் பாலா படம் முடிய ரெண்டு வருடமாவது ஆகும்’ என்ற ஆப்பு இருப்பதை புரிந்துகொள்ளாத அதர்வா,அதற்கு பதில் சொல்கிறேன் பேர்வழி என்று இன்னொரு ஆப்பையும் தனக்குத்தானே வைத்துக்கொண்டார்.’’என்ன செய்யிறது சார்  நான் செலக்ட் பண்ற கதைகள் அப்படித்தான் அமையுது’’ இது அதர்வாவின் பதில்.

அப்ப பாலாவோட கதைய, தம்பி அதர்வா தான் செலக்ட் பண்ணினாரா?
இது பாலாவுக்கு தெரியுமா?

பாலா படத்தை முடிக்கிற வரைக்கும், பகல்ல அக்கம்பக்கம் பாத்து பேசுங்க, ராத்திரியில அதுவும் பேசாதீங்க அதர்வா தம்பி.
தேவையில்லாத பீதியக்கிளப்பி விட்டுடுவாய்ங்க..ஆமா,.

No comments:

Post a Comment