Thursday, December 8, 2011

த்ரிஷா வீட்டுக்கு நீயா ..நாயா?/

கடந்த ஒரு வாரமாக,கோடம்பாக்கத்தில் கும்மியடிக்கப்படும் செய்தி த்ரிஷாவின் கல்யாணச்செய்திதான்.
கணவர் நல்லவராக இருக்கவேண்டும் குடிப்பழக்கம் இருக்கக்கூடாது,என்னிடம் மட்டுமே அன்பாக இருக்கவேண்டும்,எந்த உன்மையையும் என்னிடம் மறைக்கக்கூடாது என்கிற ரீதியில் எதிர்பார்ப்பு கொண்டவர்களைத்தான் இதுவரை பார்த்திருக்கிறோம்.
ஆனால் த்ரிஷா தனது கணவன் பற்றிய எதிர்பார்ப்பில் ஒட்டுமொத்த உலகையும் புல்லரிக்க வைக்கிறார்.
தனக்கு வரக்கூடிய கணவன், தான் ஒரு நாய்ப்பிரியை என்பதை புரிந்துகொண்டு நடப்பவராக இருக்கவேண்டுமாம்.நாயா நாதரா என்று ஒரு பிரச்சினை வந்தால் நாய் பக்கம்தான் நான் என்பதை புரிந்து கொள்பவராக இருக்கவேண்டும்’ என்கிறாராம் நாய்ஷா ஐ யாம் வெரி ஸாரி த்ரிஷா,
நாய்க்கு வாழ்க்கைப்பட்ட மாதிரி என்று ஒரு சொலவடை உண்டு அதை நாயோடு சேர்ந்து வாழ்க்கைப்பட்ட மாதிரி என்று ஏற்றுக்கொள்ள தயாராக இருப்பவர்கள் உடனே த்ரிஷாவை அணுகுங்கள்.

No comments:

Post a Comment