Sunday, December 4, 2011

ஓய் திஸ் ‘குஸ்தி?

கொலவெறி என்ற வார்த்தையை மக்கள் மனதிலிருந்து எப்படியாவது நீக்கிவிட வேண்டும் என்று பலவெறி பிடித்து அலைகிறார் நடிகர் சிம்பு.

இதை ஒட்டி ஆடப்படுகிற டிராமா’ தான் ஒஸ்தி’ வரும் 8ம் தேதி ரிலீஸ் ஆகாது என்று பரப்பப்படும் செய்திகள் என்கிறது தனுஷ் வட்டாரம்.

மொத்த தமிழ்நாடும் கொலவெறி காய்ச்சலில் இருந்து விட்டு ‘ஒஸ்தி’யை அம்போ என்று விட்டுவிட்டால்,போட்ட காசு ஆயிடும் நாஸ்தி என்று தன் பங்குக்கு டி.ஆரும் பயப்படுகிறாராம்.

இதனால் அப்பாவும் மவனும் திட்டமிட்டு ,ரிலீஸ் வரைக்கும் தினமும் பேப்பர்களில் ஒஸ்தி பத்தி ஏதாவது நியூஸ் வந்து கொண்டே இருக்க ஏற்பாடுகள் செய்திருக்கிறார்களாம்.

‘’8 ம்தேதி உறுதியா வர்றோம். ஆனா அதுவரைக்கும் ஒஸ்தி வருது வராதுன்னு தமிழ்நாடு முழுக்க பட்டிமன்றம் பத்திஎரியணும்’ என்று சிம்பு ரசிகர்கள் முன்னிலையில் முண்டாசு தட்டுகிறாராம் டி.ஆர்.

ஒய் திஸ் குஸ்தி?

No comments:

Post a Comment